மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஒபாமா மலர் தூவி அஞ்சலி

ஞாயிறு, 25 ஜனவரி 2015 (17:33 IST)
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். ஒபாமா வருகையால் மகாத்மா காந்தி நினைவுடம் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமா அரச மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனிருந்தார்.
 
ஒபாமா ராஜ்காட் வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்