ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஒபாமாவிற்கு ராணுவ மரியாதை

ஞாயிறு, 25 ஜனவரி 2015 (17:17 IST)
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஒபாமாவை 21 குண்டுகள் முழங்க முப்படை வீரர்கள் வரவேற்றனர். பாரம்பரிய முறைப்படி ஒபாமாவிற்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
 
வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும்  பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்