மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது : ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

வியாழன், 7 ஜனவரி 2016 (15:59 IST)
வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இயங்காது என்று தெரிய வந்துள்ளது.


 

 
வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பனிச்சலுகை போன்றவை தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக்கோரி நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் நாளை (ஜனவரி 8) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
 
இதனால், நாளை 8 ஆம் தேதி, மாத இரண்டாம் சனிக்கிழமையான 9ஆம் தேதி, அதன்பின் ஞாயிற்றுக் கிழமை 10 ஆம் தேதி என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்