இவர் எம்.பி. ஆன பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி பத்திரங்களை கொடுத்து ரூ. 25 கோடி கடன் வாங்கி மோசடி செய்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ், வங்கி அதிகாரிகள் அரவிந்தக்ஷன், ஜெயபிரகாஷ், போலி பத்திரம் தயாரித்து கொடுத்த ராஜ்குமார் உள்பட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.