24ஆம் தேதி ஹோலி பண்டகை, 25ஆம் தேதி புனிதவெள்ளி, 26 சனிக்கிழமை விடுமுறை, 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது.
முக்கியமாக ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சிகள் மூலமாக செய்து வந்தாலும், தொடர் விடுமுறையால், ஏ.டி.எம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.