கலந்துரையாடல் மூலம் இந்த பிரச்சனைக்கு முடிந்த அளவு தீர்வு காண முயற்சிக்கிறோம். எடுக்கக்கூடிய முடிவு அமைதியான வழியிலும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். அதேபோல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும், என்றார்.
மேலும் அன்சாரி கூறியதாவது:-
நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். இந்த பிரச்சனைக்கு கண்டிப்பாக அமைதியான வழியிலே தீர்வு காண வேண்டும். அதுதான் இரு தரப்பு சமுதாயத்தினருக்கும் மகிழ்ச்சி, என்றார்.