நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி செய்த தடகள வீரர்

புதன், 10 ஜூன் 2015 (19:26 IST)
கேரளாவில் விளையாட்டு பயிற்சி மையத்தில் இளம் விளையாட்டு வீரர் ஒருவர் மணிகட்டை கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
கேரளாவில் உள்ள சாய்பாபா விளையாட்டு பயிற்சி மையத்தில் இருந்த 19 வயது ஓட்ட பந்தய மாணவர் ஒருவர் திடீரென மைதானத்தில் மணிக்கட்டில் கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த சகவீரர்கள் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள்னர். அவருக்கு மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளது. அந்த மாணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்