அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர்

புதன், 20 ஜனவரி 2016 (22:11 IST)
அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் குவாகாத்தி, அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
சாரதா சீட்டு நிறுவன மோசடியில் பாஜக முத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக தருண் கோகோய் குற்றம் சாட்டினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, தருண் கோகோய்க் மீது ரூ.100 கோடி கேட்டு சர்மா அவதூறு வழக்கு தொடுத்தார்.
 
இந்த வழக்கு குவாகாத்தி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் கோகோய் ஆஜரானார். இதனால் நீதி மன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்