இது குறித்து, அசாம் பாஜக தலைவர் சித்தார்த்த பட்டச்சார்யா கூறுகையில், சமீபத்தில்தான், முதலமைச்சர் அருண் கோகாயின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் மரணமடைந்தார். அடுத்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணமடைந்தார். ஆனால், இந்த துயரத்தில் பங்கு கொள்ளாமல், இங்கு முதலமைச்சர் பெண்களுடன் நடனமாடியும், கோல்ப் ஆடியும் பொழுதைக் கழிக்கிறார் என்று வார்த்தைகளால் வெளுத்து வாங்கினார்.
இந்த சம்பவம் குறித்து, அசாம் முதலமைச்சர் அருண் கோகாய் கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்காக நாடே துயரத்தில் இருந்த போது, நான் டான்ஸ் ஆடியது தவறுதான். இதற்கான நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.