அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெறும் சம்பிரதாயத்திற்கானது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கை உங்களுக்கானது; புனிதமானது. பாரதீய ஜனதா அதன் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாரதீய ஜனதா ஏன் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயங்குகிறது? இந்த தேர்தல் அறிக்கை, அடுத்த 4 மாதங்களில் டெல்லி மக்களுக்கான எங்களின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பாகும் என தெரிவித்துள்ளார்.