டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக, அருண் ஜெட்லி பதவி வகித்த போது, பல கோடி ரூபாய் ஊழல்கள் நடைபெற்றதாக டெல்லி முதலமைச்சசர் அர்விந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், என் மீது, ஆதாரமற்ற தகவல்களை டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் வெளியிட்டு வருகிறார். எனவே, அவர் மீதும், அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஐந்து பேர் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.