கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள்: பாஜக தேசிய செயலாளர்

சனி, 9 ஜனவரி 2016 (08:27 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது சகாக்களும் சிறைக்கு செல்ல தயாராக இருக்குமாறு பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியுள்ளார்.


 

 
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்றது.
 
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் அம்மாநில முலதமைச்சர் கெஜ்ரிவால் அரசு அமைத்த விசாரணை கமிஷன் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறிவருகிறது.
 
இந்நிலையில், விசாரணை கமிஷனை மத்திய அரசு சட்டவிரோதமானது என்று கூறினாலும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா "தனது தோல்விகளை மறைப்பதற்காக டெல்லி அரசு அரசியல் அமைப்புக்கு எதிராக பல முடிவுகளை எடுத்துவருகிறது. 
 
இதற்காக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்