நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் துவங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரதிற்காக வாரணாசி சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கும் வகையில், அவர் டெல்லி முதலமைச்சர் பதிவியில் இருந்து விலகியதை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரதிற்காக வாரணாசிக்கு தனது குடும்பத்தினரோடு வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்ற 49 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதை கேலி செய்யும் விதத்தில், நகரின் அனைத்து பகுதிகளிலும் கெஜ்ரிவாலை 'தப்பி ஓடியவர்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.