ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (16:39 IST)
ராஜ்தானி ரயிலில் 17 வயது இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அஸ்ஸாமில் திப்ருகர் - டெல்லி ராஜதானி ரயிலில் 17 வயது இளம்பெண் ஒருவர் அவருடைய உறவினரோடு  ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
 
இன்று காலை சுமார் 4 மணி அளவில், அப்பெண் அலறியதை அடுத்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பயணிகள் பிடித்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவரின் பெயர் குல்விந்தர் சிங் எனவும் அவர் ஒரு ராணுவ வீரர் எனவும் தெரியவந்துள்ளது. 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்