குடியரசு தின விழாவிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

சனி, 24 ஜனவரி 2015 (17:45 IST)
டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க என்னை ஏன் அழைக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
குடியரசு தின விழாவில் எனக்கு பங்கேற்க வேண்டும். ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.
 
டெல்லியின் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்