டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆம் ஆத்மி பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க, அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் வீடியோ பதிவு செய்து புகார் செய்யலாம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது பேச்சே ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.