முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் விஷன் 2020 மூலம் இளைஞர்கள், மாணவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளர். இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல கலாம் வழிகாட்டுவார் என்ற தாக்கம் இளைஞர்கள், மாணவர்களிடம் ஏற்பட்டதால் இந்த அளவுக்கு மாபெரும் கூட்டம் திரண்டது. அதனால் தான், இன்று 5 லட்சம் பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
அப்துல் கலாம் டெல்லியில் வசித்த வீட்டை குழந்தைகளுக்கான அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்று அவரது உறவினர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிச்சயமாக ஏற்கும். எனவே, இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.