அண்ணா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு

புதன், 4 மார்ச் 2015 (17:31 IST)
நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு பேஸ்புக் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
கனடாவைச் சேர்ந்த ஒருவர், தனது பேஸ்புக்கில் பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளின் பதிவில், விரைவில் அண்ணா ஹசாரேவை கொல்லப் போவதாகவும். அதற்காக தான் கோட்சேவாக மாற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அண்ணா ஹசாரேவின் அமைப்பைச் சேர்ந்த அஷோக் கௌதம் அளித்த புகாரின் பேரில் கனடாவைச் சேர்ந்த இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்