இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த்சர்மா, அரசின் பல்வேறு அமைப்புகள் மோடி ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். ஜனநாயக அமைப்புகளை மோடி அரசு நாசப்படுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளார். மேலும் கல்வியுடனும் பாஜக ஆட்சி விபரீதமாக விளையாடுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.