இது குறித்து ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’இந்தியா எப்போதுமே சகிப்துத் தன்மை கொண்ட நாடு தான். இங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும் சகிப்புத்தன்மை உடையவர்கள் தான்.
வாஜ்பாய் ஆட்சியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் மோடி ஆட்சியிலும் தொடர்கின்றன. இதுபோல, ஆட்சிகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி நல்லாட்சி என்று என்னால் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.