கவுகாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாம் அமைக்க முயல்வதாக தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள முயல்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தருண் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் உல்ஃபா தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோகாய் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வதில்லை என்று பதிலளித்தார். துர்கா பூஜையின் போது நாச வேலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.