ஏர்டெல்லின் 4ஜி சேவையை விட மிக விரைவான இன்டர்நெட் சேவையை வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான போன் கனெக்சன் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம், மக்களை ஏமாற்றும் செயல் என்று இந்திய விளம்பரங்களுக்கான தரக்கட்டுப்பாட்டுக் கழகம் (ஏஎஸ்சிஐ) தெரிவித்துள்ளது. எனவே ஏர்டெல்லின் 4ஜி சேவை விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது என்று ஏஎஸ்சிஐ ஊடகங்களுக்கு தடைவிதித்துள்ளது.