தயாநிதி, கலாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வெள்ளி, 8 ஜனவரி 2016 (21:18 IST)
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 6 பேர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


 

 
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின் இவர்கள் மீதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்கு பலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்