இதுதொடர்பாக இரு டிவிட்டர் பதிவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், அவற்றில், 'சிட்னியில் தரையிறங்கிவிட்டேன். கெய்ர்ன்ஸுக்கு செல்வதற்கான விமானத்தில் பயணிக்கவுள்ளேன். நான் கொண்டுவந்திருந்த சூட்கேஸ் காணவில்லை' என்றும், 'கெய்ர்ன்ஸுக்கு செல்லும் விமானத்தில் இருக்கிறேன். என்னுடைய உடைகள் காணமல்போன சூட்கேஸில் உள்ளன. கெய்ர்ன்ஸில் சேலை வாங்க முடியுமா என தெரியவில்லை. நிலைமை உறுதியற்றதாக உள்ளது' எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தெரிவித்த ஏர் இந்தியா மேலாளர் மது மதன், காணமல் போன நிர்மலா சீதாராமனின் சூட்கேஸ் கிடைத்துவிட்டதாகவும், அது இன்னும் 6 மணி நேரத்தில் கெய்ர்ன்ஸுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.