தன்மே பட் என்பவர் சச்சின் மற்றும் லதா மங்கேஷ்கரின் உருவத்தில் வந்து அவர்களை கலாய்க்கிறார். அதில் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவரா? கோலி சிறந்தவரா என்ற கேள்விக்கு சச்சின், லதா மங்கேஷ்கர் உருவத்தில் வந்து பேசும் அவர் மிகவும் கீழ் தரமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்.
இந்த வீடியோவை வெளியிட்ட ஏஐபி மற்றும் தன்மே பட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகராஷ்டிர முதலமைச்சருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா அமைப்பினர், சச்சின் மற்றும் லதாமங்கேஷ்கர் வீடியோவிற்கு எதிராக மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தன்மே பட்டின் வீடியோவை முடக்க, ஃபேஸ்புக், கூகுள், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களை தொடர்பு கொண்டுள்ளதாக மும்பை சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.