இதுவரை, மும்பை ஊர்க்காவல்படை தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த அஹமது ஜாவேத், மும்பை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கு விவகாரத்தில், மும்பை போலீஸ் கமிஷனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் மரியா மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை மகாராஷ்டிர அரசு மறுத்துள்ளது.