மும்பை சிட்டி போலீஸ் கமிஷனராக அஹமது ஜாவேத் நியமனம்

புதன், 9 செப்டம்பர் 2015 (02:33 IST)
மும்பை சிட்டி போலீஸ் கமிஷனராக  அஹமது ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுவரை, மும்பை ஊர்க்காவல்படை தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த அஹமது ஜாவேத், மும்பை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியாவுக்கு, ஊர்க்காவல் படை தலைமை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
ஷீனா போரா கொலை வழக்கு விவகாரத்தில், மும்பை போலீஸ் கமிஷனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் மரியா மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை மகாராஷ்டிர அரசு மறுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்