கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு தாக்கல்...

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:09 IST)
நடிகை ரம்பா தனது கணவரிடம் சேர்ந்து வாழ விரும்புவதால், சட்டப்படி அவரிடம் தன்னை சேர்த்து வைக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
1990களில் இருந்து 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ஏறக்குறையை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார். 
 
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அவர், 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 


 

 
இந்நிலையில், விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும், தனது கணவரோடு தான் வாழ விரும்புவதாகவும், எனவே சட்டப்படி அவரோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்