கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:15 IST)
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். தற்போது கன்னட திரையுலகில் முன்னனி நடிகராக உள்ளார்.இந்நிலையில் இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோகிராம் மூலம் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான ஹார்ட்-அட்டாக்ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதனை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்