மும்பையில், மது மயக்கில், காரை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்படுவரா அல்லது சிறையில் அடைக்கப்படுவார என, அவரை முன்னிலைப்படுத்தி சுமார் 200 கோடி அளவில் சூதாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சல்மான் கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மது போதையில் வேகமாக கார் ஓட்டி சென்ற போது, சாலையோரம் தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்த வழக்கு மும்பை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்படுவரா அல்லது சிறையில் அடைக்கப்படுவார என, அவரை முன்னிலைப்படுத்தி இணையதளம் மூலம் உள்ளே, வெளியே சூதாட்டம் சுமார் நூறு கோடி ரூபாய் அளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.