மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி விவகாரத்தில் நடிகையை பழிவாங்கவே திலீப் இதை செய்துள்ளார் எனவும் அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார். அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். மேலும், பல்சுனிலின் நண்பர் ஒருவர் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திலீப் போலீசாரிடம் புகார் அளித்தார்.