பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் - ஆண்ட்டியின் பேச்சால் பரபரப்பு

புதன், 1 மே 2019 (13:57 IST)
அரைகுறையாக ஆடை அணிந்து அல்லது குட்டை ஆடை அணிந்திருக்கும் இளம்பெண்களை பலாத்காரம் பண்ணுங்கள் என்று  நடுத்தர வயதுள்ள ஒரு பெண் கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வீடியோ காட்சியாக வெளியாகி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு ஏற்ப நாட்டில் பல்வேறு குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. அதில் பல அப்பாவி இளம்பெண்கள், மாணவிகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்துவருகின்றன.
 
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு உணவகத்துக்குள் நுழைந்த நடுத்தர வயதுள்ள பெண், அங்கு குட்டையான ஆடை அணிந்திருந்த பெண்களைப் பற்றி அருகில் இருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்துவருகிறார்கள்: என்றும், இவர்கள் எல்லாம் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்று கூறினார். இதைக்கேட்ட இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
பின்னர் நடுத்தர வயது பெண்ணிடம் இதுபற்றி வாக்குவாதம் செய்து தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
ஆனால் இதைக்கேட்காத அப்பெண் உணவகத்துக்குள் சுற்றிவந்தார்.  அப்போது மற்றொரு பெண் உணவகத்துக்குள் வர அவரிடம் முறையிட்டார். ஆனால் வந்தவர் அப்பெண்ணுக்கு எதிராகவே பேசினார்.
 
ஆனால் கடைசிவரை அப்பெண் தனது கூற்றுக்கு மன்னிப்பு கேட்டகவே இல்லை என்று தெரிகிறது.
 
இதைப் படம் பிடித்த இளம்பெண்கள்  சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இது வைரலாகிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்