அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்காமலேயே காதில் வைத்து பேசத்தொடங்கினார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜுலால் குஜாரின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், கை மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவன்மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மின் அதிர்ச்சி மற்றும் தீக்காயம் காரணமாக வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.