அந்த காரில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர், அவர்களும் சேர்ந்து 6 பேர் ஓடும் காரில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பயனபடுத்திய கார் ஒரு கால் சென்டருக்கு சொந்தமானது. குற்றவாளிகளில் ஒருவன் அந்த கால்சென்டரில் பணிபுரிபவன்.
சந்தேகத்துக்கு இடமாக திரிந்த அந்த காரை கண்காணித்த காவல் ரோந்து வாகனம், அவர்களை விரட்டி பிடித்த போது இந்த சம்பவம் தெரியவந்தது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவன் தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் ரமேஷ், நரேந்திரா, சந்தீப், ராகுல் மற்றும் சூரஜ் என தெரியவந்துள்ளது.