ஜம்மு காஷ்மீரில் 78,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று எல்லை பாதுகாப்பு மற்றும் பிற நாடுகளின் ஊடுருவல் குறித்து பேசுகையில், பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
1963-ம் ஆண்டு, சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின் படி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 5180 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்துவிட்டது என்று தெரிவித்தார். இந்தோ-வங்கதேசம், இந்தோ-சீனா, இந்தோ-நேபாளம், இந்தோ-பூட்டான் மற்றம் இந்தோ-மியான்மர் போன்ற எல்லைகள் வழியாக எந்த நாடுகளும் அத்துமீறவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார்