இந்நிலையில் ஊடகங்களின் விதிமுறைகளை மீறியதாக 73 டிவி சேனல்கள், 24 எப்.எம்.ரேடியோ சேனல்கள் மற்றும் 9 வார-மாத இதழ்களுக்கு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அச்சு ஊடகங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பி.ஆர்.பி 1897 சட்டத்துக்கு மாற்றாக பி.ஆர்.பி.பி என்ற புதிய மசோதாவை கொண்டு வருவதற்கான முயற்சிகளை துவங்கிவிட்டதாகவும் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.