திருத்தப்பட்ட இந்த சட்டத்தின் படி சிறார்களுக்கு போதைப் பொருட்களான பீடி, சிகரெட், மதுபானம், பான்பராக், புகையிலை போன்றவற்றை விற்பனை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லடசம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய அரசாணையை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துவதும் இந்த சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும், இவர்களுக்கு இந்த தண்டனையும், அபராதமும் பொருந்தும்.
ஐ.நா வின் குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தில் 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும் சிறாராக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம் கொடுங்குற்றம் புரியும் சிறார்களை பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.