ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் பிணம் ஆற்றில் மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்

புதன், 25 ஜனவரி 2023 (12:49 IST)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர்களின் பிணங்கள் ஒரிசா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரிசா மாவட்டத்தில் உள்ள பீமா என்ற ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் மொத்தம் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
முதல் கட்ட விசாரணையில் இந்த ஏழு பேர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஏழு பேர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர்களின் பிணம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் புனே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்