50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்த கொடூரம்

சனி, 20 ஆகஸ்ட் 2016 (21:06 IST)
திருவனந்தபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தின் மாநில தலைமை செயலகத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது புலுவில்லா . இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதைப்பற்றி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.
 
இந்நிலையில் நேற்றிரவு 9.00 மணியளவில் சீலூவம்மா (65) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை கடித்து குதறியதில் அவர் இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.
 
அவரை தேடி வந்த அவரது மகன் சீலூவம்மா இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்