மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் வைஷாலி யாதவ்( வயது 6). பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டை இருந்ததால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தார். வைஷாலியின் தந்தை கூலி வேலை செய்துவருவதால் மகளின் மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவதியுற்றார்.
இதையடுத்து அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் வைஷாலிக்கு கடந்த 4-ம் தேதி இதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கும் இலவச ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது உடல்நிலை தேறிவரும் வைஷாலி நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.