மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 17 ஆயிரம் பள்ளிகளில் மிக்குறைவான மாணவர்களே படிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் தலா 10 க்கும் குறைவான மாணவர்களே படிப்பதாகவும் 13,400 பள்ளிகளில் தலா 10 முதல் 20 மாணவர்கள்வரை மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல் அவற்றை மூடுவது ஏன் என்ற கேள்வியுடன், மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.