விபச்சாரத்துக்கு சிறுமிகளை கடத்திய 4 பேர் கைது

வியாழன், 28 ஜூலை 2016 (16:33 IST)
ஆந்திர மாநிலம் கடப்பா ரெயில் நிலையத்தில் விபசாரத்துக்கு சிறுமிகளை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 
ஆந்திர மாநிலம் கடப்பா ரெயில் நிலையத்தில் 13 வயது முதல் 16 வயது வரை உள்ள 11 சிறுமிகள் சென்னை செல்லும் ரெயிலுக்கு காத்து இருந்தனர். அவர்கள் கூட்டமாக நிற்பதை பார்த்த ரெயில்வே காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிறுமிகளிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறினர். சிறுமிகளிடம் காவலர் விபச்சாரத்தை பார்த்த 10 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை காவல்துறையினர் விரட்டி சென்றனர். இதில் 4 பேர் மட்டுமே சிக்கினர். 6 பேர் தப்பி ஓடினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிகளை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் கடப்பா மாவட்டம் கொருமாமில்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்