31 பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்கிறது இந்தியா

வெள்ளி, 1 ஜனவரி 2010 (14:21 IST)
2010 புத்தாண்டை முன்னிட்டு 31 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

இதுதொடர்பாக அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தான் அரசால் அந்நாட்டு மீனவர்கள் என உறுதி செய்யப்பட்ட 31 பேர் வரும் ஜனவரி 2ஆம் தேதி இந்திய-பாக். எல்லையில் உள்ள அட்டாரி வழியாக பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படுவார்கள” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மேலும் 19 பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களின் தேசிய இனம் உறுதி செய்யப்பட்டதும் அவர்களும் விடுவிக்கப்படுவர் என அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்