நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முதல் கட்டமாக அஸ்ஸாமில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் தொகுதியில் பல்குரி நேபாளிபம் கிராமத்தையும், ஒரே குடும்பத்தையும் சேர்ந்த 301 வாக்காளர்கள் வாக்களித்தனர்.