இந்நிலையில், சம்பவ நாள் அன்று, தனது நண்பர் கபிலை காண, அந்தப் பெண் குர்கானில் உள்ள கடை வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்பு, கபிலுடன் கெஸ்ட் அவுஸ் சென்றாகக் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து மீண்டு வந்த அப்பெண், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
தலைநகர் டெல்லியல் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.