கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 21 பேர் பலி

சனி, 13 ஜூன் 2015 (11:37 IST)
கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆந்திராவின் விசாகபட்டினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் திருப்பதிக்கு சாமி தரிசனம் மேற்கொண்டனது. இவர்கள் அனைவரும் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வேனில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். வேன் ராஜமுந்திரி அருகே பயணித்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராவிதமாக வேன் கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. 
 
இதில் வேனில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானோரில் 8 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளும் அடங்கும். இதில் அதிர்ஷ்டவசமாக ஒரு சிறுவன் மட்டும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்து முடிந்த இந்த கோர சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்