இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதனிடையே ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை.