மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் பலி

வெள்ளி, 26 ஜூன் 2015 (00:47 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பேருந்தில் சென்ற 20 பேர் விபத்தில் பலியானார்கள்.
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சாலிஸ்கானில் இருந்து சூரத் நோக்கி மகாராஷ்டிர மாநில அரசு பேருந்து பகல் 2.30 மணி அளவில் சென்ற போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில், கண்டெய்னர் டிரைவர் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனே துலே மற்றும் சாலிஸ்கான் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
 
ஆனால், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்பு உள்ளது என கூறப்படுகின்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்