தலைநகர் தில்லியில் அமன் விஹார் பகுதியில் உள்ள பூங்காவிற்கு தனது நண்பர்களுடன், 18 வயது மற்றும் 17 வயது நிரம்பிய 2 இளம்பெண்கள் சென்றிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்களுடன் வந்திருந்த ஆண் நண்பர்களை தாக்கியுள்ளனர்.
பின்னர் இரு பெண்களையும், பூங்கா அருகே இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் தப்பிவிட்ட நிலையில் மற்ற 4 பேரை கைது செய்தனர்.