ஜம்முகாஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில் தான் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடுத்தது. சிறியரக பீரங்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இரு தரப்புக்கும் இடையே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தூப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் இந்திய எல்லைப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதனிடையே தாக்குதலில் தன் இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.