கேரள மாநிலத்தில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் கடந்த 10ஆம் தேதி உத்தரப்பிரதேச மநிலம், குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான தித்ரஜி (40) என்பவரும் வங்கி வாசலிலே மயங்கி விழுந்து மரணமடைந்தார். புதிய நோட்டுகள் பெறச் செல்லும் இடங்களில் இது தொடர் சம்பவம் நிகழ்வது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.